கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் 59 வழக்குகளில் ரூ.3.79 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. இந்தியா முழுவதும் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலப்பிரச்னை ஆகியவற்றை எளிய முறையில் தீர்த்துக் கொள்வதற்காக மக்கள் நீதிமன்ற மூலம் முகாம் நடத்தி வழக்குகளை நேரடியாக தீர்த்து வைத்து வருகிறது. இதனடிப்படையில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, நிலப்பிரச்னை தொடர்பான வழக்குகள் என பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.