மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி, கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.  நிகழ்ச்சியில் யோகா பயிற்சி ஆசிரியை பத்மினி, சுகுணா, கீதா உள்பட 8 ஆசிரியைகள் மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை வழங்கினார்கள். நேற்று யோகா பயிற்சி பெற்ற 31 மாணவிகளுக்கு சான்றிதழை, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பொ) சங்கர் வழங்கினார். இதில் பள்ளியின் ஆசிரியர் கந்தசாமி, செந்தில்குமார், சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: