கடலூர், மார்ச் 8: கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம், விளைநிலங்களை கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏக்கள் தலைமையிலான குழுவினர் அமைச்சர் மற்றும் ஆட்சியரை நேற்று சந்தித்து முறையிட்டனர். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின்போது பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவக்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சன் முத்துகிருஷ்ணன், ஜெகன், கார்த்திகேயன், செல்வ மகேஷ் மற்றும் நிர்வாகிகள் என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.