மோகனூர், மார்ச் 5: மோகனூரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை ஓசூரில் மீட்ட தனிப்படை போலீசார், அவரை கடத்திய கல்லூரி மாணவரை போக்சோவில் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த லத்துவாடியைச் சேர்ந்த லாரி டிரைவரின் 15 வயது மகள், அணியாபுரம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 18ம்தேதி, மாணவி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மகளை லத்துவாடி அரசு கல்லூரியில் பயிலும் தர்மபுரி அனுமந்தபுரத்தை சேர்ந்த முனுசாமி மகன் மனோஜ்குமார் (22) என்பவர், தங்களது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தனர்.