மதுரை, மார்ச் 5: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் வைகை தென்கரை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சலவைக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வைகை ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து தெற்கு மண்டலத்தில் வில்லாபுரம் பகுதியில் ரூ.13.73 லட்சம், அனுப்பானடி பகுதியில் ரூ.3.36 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜையில் பங்கேற்றார்.