மோகனூர்: மோகனூர் வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, 2 ஆயிரம் ஆடுகள் வெட்டி விருந்து வழங்கப்பட்டது. மோகனூரில் வள்ளியம்மன் கோயில் உள்ளது. கொங்கு குலாளர் கிழங்கு நாடு 3 அண்ணன்மார்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறும். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பொங்கல் விழா நடைபெற்றன. பூ மிதித்தல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தல், பிறந்த வீட்டு பிள்ளைகள் வீட்டு அழைப்பு, மாமன்மார்களுக்கு மாலை மரியாதை செய்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
