வேலூர், மார்ச் 3: வேலூரில் 57 போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாசை டிஎஸ்பி நேற்று வழங்கினார். வேலூரில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வெயிலை பொருட்படுத்தாமல் போக்குவரத்து போலீசார் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பழச்சாறு, தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்க டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார். அதன்படி அவர் இந்த திட்டத்தை ெதாடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்றுமுன்தினம் எஸ்பி ராஜேஷ்கண்ணனுடன் இணைந்து பழச்சாறு மற்றும் குளிர்மோர் வழங்கினார். இந்நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
