தா.பழூர்: தா.பழூர் பகுதியில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது. காலை முதல் வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் திடீரென திரண்ட மேகங்களால் மழை பொழிந்தது. இந்த மழை பொழிவு கடலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும். முடிவுறும் தறுவாயில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் சற்று பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் வட்டார பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.