பவித்திரம் வாரச்சந்தையில் ரூ.31.50 லட்சத்தில் ஆடு, ேகாழி விற்பனை

சேந்தமங்கலம், பிப்.28: எருமப்பட்டி அடுத்த பவித்திரம் வாரச்சந்தையில் நேற்று, ரூ.31.50 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனையானது. எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டத்தில் உள்ள நவலடிப்பட்டி, வரகூர், செவிந்திப்பட்டி, வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆடுகளை விற்பனைக்கு ஒட்டி வருகின்றனர்.  இந்த ஆடுகளை வாங்க ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருகின்றனர்.

நேற்று கூடிய சந்தைக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. சந்தையில் ஆடுகள் எடையை பொருத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதேபோல் நாட்டுக்கோழி ரூ.200 முதல் ரூ.600 வரையிலும் விற்பனையானது. ரூ.30 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.1.50 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகளுமாக மொத்தம் ரூ.31.50 லட்சத்திற்கு நேற்று சந்தையில் வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: