சேந்தமங்கலம், பிப்.28: எருமப்பட்டி அடுத்த பவித்திரம் வாரச்சந்தையில் நேற்று, ரூ.31.50 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனையானது. எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டத்தில் உள்ள நவலடிப்பட்டி, வரகூர், செவிந்திப்பட்டி, வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆடுகளை விற்பனைக்கு ஒட்டி வருகின்றனர். இந்த ஆடுகளை வாங்க ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருகின்றனர்.
