ராசிபுரம்: ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜாய்சி அன்னம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர்.சதாசிவம், ஒன்றிய குழு உறுப்பினர் நாராயணசாமி, வட்டார வள மேற்பார்வையாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி, கவிதை, நடனம், கட்டுரை, நாடகம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.