நாமக்கல், பிப்.25: புதுச்சத்திரம் அருகே நவணி வெள்ளாளப்பட்டியை சேர்ந்த செல்வவிநாயகர் கோயில் தர்மகர்த்தா ராஜா மற்றும் ஊர்பொதுமக்கள், நேற்று நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்து, எஸ்பி கலைசெல்வனிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்வவிநாயகர், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறேன். கோயில் சிதிலம் அடைந்து இருந்ததால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, ஊர்பொதுமக்கள் அனைவரும், கும்பாபிஷேக பணிகளை செய்து வருகிறோம்.