சிவகங்கை, பிப்.25: சிவகங்கை மாவட்ட மோப்ப நாய் படை பிரிவில் புதிய நாய் சேர்க்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் ஜூலி என்ற மோப்ப நாய் இருந்தது. இது பணியில் இருந்து ஒய்வு பெற்றதால், அதற்கு பதிலாக மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் புதிய நாய்க்குட்டி சேர்க்கப்பட்டுள்ளது. டயானா என பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்குட்டிக்கு வெடிகுண்டு கண்டறியும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.