செய்யாறு, பிப். 24: செய்யாறு வழியாக ஆந்திர இளைஞர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து 50,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதுச்சேரி பாளையம், பகுதியைச் சேர்ந்த அரிசி வியாபாரி நரசிம்மலு மகன் குரம் பஞ்சாலா சைதன்யா(23). இவர் பிபார்ம் படித்துள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு நெல்லூர்-கன்னியாகுமரி 500 கி.மீ தூரத்தில் மே 16 முதல் ஜூன் 3 பயணம் மேற்கொண்டு மரம் வளர்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பயணம் செய்தாகவும், ஜூன் 4 முதல் ஆகஸ்ட் 25 நெல்லூர் - பாகிஸ்தான் பார்டர் 3,880 கிலோ மீட்டர் 7 ஸ்டேட், 70 நாட்களில் பயணம் மேற்கொண்டு ஆந்திர அரசின் யூத் ஐகான் விருது செப்16ல் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.