விழுப்புரம், பிப். 24: விழுப்புரம் அருகே அன்புஜோதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அன்புஜோதி ஆசிரமத்தை துவங்கி நடத்திவந்தார். இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த ஜபருல்லா இந்த ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக எழுந்தபுகாரின்பேரில் கடந்த 10ம் தேதி கெடார் காவல்நிலைய போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 11க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.