நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1.45 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் பிப்.22: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1.45 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 5500 மூட்டை பருத்தி கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். ஏலத்தை கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம்  ஒரு குவிண்டால் ₹8405க்கும், டிசிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹8599க்கும், மட்ட ரகம் ஒரு குவிண்டால் ₹7209க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹1.45 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Related Stories: