நாமக்கல்: நாமக்கல்லில், உலக சிக்கன நாளையொட்டி, நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உலக சிக்கன நாள் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலெக்டர் ஸ்ரேயா சிங், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.