வேளச்சேரி: தரமணி, சி.பி.டி. வளாகத்தில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் ந.அருள் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வரவேற்றார். இதில், ‘மொழி வளத்திற்கு மொழி பெயர்ப்பின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு பேசினார்.