அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக சார்பில், சிறப்பு சந்தை அமைத்து தரப்படுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கவில்லை. இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்துள்ள நிலையில், ஆயுதபூஜைக்காக இன்று சிறப்பு சந்தை திறக்கப்படுகிறது. இதையொட்டி, பூஜைக்கு தேவையான பொரி, அவல், கடலை, சர்க்கரை, பழங்கள், வாழைமரங்கள், தோரணங்கள், இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பு அடைய தொடங்கியுள்ளது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்த சிறப்பு சந்தை இன்று முதல் அடுத்தமாதம் 9ம் தேதி நடைபெறுகிறது.