மானாமதுரை, செப்.27: மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டில் அரசு பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் நகையை திருடிய இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர். திருநெல்வேலியை சேர்ந்தவர் மாலா. இவர் நேற்று மானாமதுரை வழியாக மதுரைக்கு செல்ல அரசு பஸ்சில் ஏற முயன்றார். மாலா தான் வைத்திருந்த கட்டை பையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கசங்கிலி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட இருபெண்கள் கூட்ட நெரிசலில் ஏறுவது போல் மாலாவின் கட்ட பையில் உள்ள தங்கச் சங்கிலியை திருடினர்.பஸ்சினுள் ஏறிய மாலா டிக்கெட் எடுப்பதற்காக கை பையை தேடிய போது தான் வைத்திருந்த நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.