பெரம்பூர்: பெரம்பூர் ஹைதர் கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் அப்ரோஸ் (40). பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கே.எம்.கார்டன் போலீஸ் பூத் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் வண்டி மீது இடித்து விட்டார். உடனே அந்த நபர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்ரோஸ் பணம் இல்லை என கூறவே அவர் அப்ரோசை தாக்கி ரூ.6000, செல்போன், ஏடிஎம் கார்டு மற்றும் அப்ரோசின் இருசக்கர வாகனத்தை பூட்டி அதன் சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.