ராஜபாளையம், செப். 24: ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ரூ.3 கோடி மதிப்பிலான தங்கநகைகள் தப்பின. ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி எதிரே தனியார் நிதிநிறுவனம் மற்றும் அடகு கடை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நிதிநிறுவனத்தில் கொள்ளையடிக்க, வெல்டிங் மெஷின் மூலம், இரும்பு கதவை உடைக்கும் முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.