திருப்பூர்,செப்.21: திருப்பூரில், குடிபோதையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் பிரவீன் (30). இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று முன் தினம் குடும்பத்தினர் வெளியே சென்றுள்ளனர். அப்போது நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரவீன் திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டிகொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.