குளித்தலை, அரவக்குறிச்சி பகுதியில் இன்று போலீசார் கொடி அணி வகுப்பு

கரூர், ஆக. 27: கரூரைத் தொடர்ந்து குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று போலீசார்களின் கொடி அணிவகுப்பு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 31ம்தேதி தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளன. இந்த விழாவினை முன்னிட்டு, இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, விஜர்சன ஊர்வலங்கள் நடத்தப்படவுள்ளன. இந்த விழாக்கள் சிறப்பாகவும், எந்தவித பிரச்னையும் இன்றி நடைபெறும் வகையில், கரூர் மாநகரில் நேற்று காலை 200க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27ம்தேதி காலை 8 மணியளவில் கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மாலை 5மணியளவில் அரவக்குறிச்சி எல்லைக்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார்களின் கொடி அணிவகுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: