உடுமலை, ஆக. 24: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 27-ம்தேதி தொடங்குகிறது.உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இளநிலைப் பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.முதல்கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், கலைப் பாடப்பிரிவுகளில் 17 இடங்கள், அறிவியல் பாடப்பிரிவுகளில் 13 இடங்கள், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.