ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள காட்டில் வாலிபர் ஒருவர் இறந்துகிடப்பதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவை சேர்ந்த பிரசாந்த் (30) என்பதும், இவர் ஒரகடம் அருகே வல்லம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு மாதமாக வேலை செய்து வந்துள்ளார்.