தஞ்சாவூர், ஆக.11: அஞ்சல் ஊழியர் கூட்டு போராட்ட குழு சார்பில் தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார் மேலும் தஞ்சை கோட்டத்தில் 863 பேரில் 309 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை கோட்டத்தில் 306 பேரில் 111 பேரும், கும்பகோணத்தில் 539 பேரில் 106 பேரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில்,அஞ்சல் துறையை கார்ப்பரேஷன் ஆக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்.