கந்தர்வகோட்டை, ஆக.10: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரின் மையப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட வெள்ளை முனியாண்டவர், காளியம்மன் கோயிலில் சக்கரை பொங்கல் வைத்தும், ஆட்டுகிடா வெட்டி ஆதிவிமர்ச்சையாக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, பிசானத்தூர், முதுகுளம் ஆகிய பகுதியை சேர்க்க ஐநூறு குடும்பங்களுக்கு மேல் காளியம்மனுக்கு சர்கரை பொங்கல் வைத்தும், வெள்ளை முனியாண்டவருக்கு 150 ஆட்டுகிடாகள் வெட்டியும் எண்ணற்ற அரிசி மூட்டைகளில் சோறு வடித்து ஆயிரகணக்கான பக்தர்களும், ஊர் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.