அலங்குடியில் லோடு ஆட்டோவில் கடத்திய 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆலங்குடி, ஆக.9: சட்ட விரோதமாக கடத்திய 1,790 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி வழியாக லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஆலங்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அரசடிப்பட்டி முக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 1,790 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1,790 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், வாகன ஓட்டுனர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூர் முருங்கைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: