சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை மனு அளித்தார். அப்போது, பேரமைப்பு மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயம் செய்திட வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளபடி, புதிய கட்டண அறிவிப்புக்கான ஆட்சேபணையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறு-குறு வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் கொரோனா காலத்திற்கு பின்னுள்ள பொருளாதார சூழ்நிலையை கவனத்தில் கொண்டும், அரசு மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்ய விரும்புகின்றது.