பல்லடம், ஜூலை 30: பல்லடத்தில் இன்று (30ம் தேதி) வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,``பல்லடம் நகராட்சி அண்ணா நகர் முதல் மங்கலம் சாலை வரையிலான பகுதியில் பழைய பிவிசி குழாய்களை அகற்றி விட்டு நீர் கசிவு ஏற்படாத வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.