மதுரை, ஜூலை 29: கஞ்சா வழக்கில் இருவரை விடுவித்த நீதிமன்றம், எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், பரவை ரயில்வே பாலம் அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த உசிலம்பட்டி ஆரியபட்டியை சேர்ந்த முத்தையா (57), செல்லூர் காசிநாதன் (55) ஆகியோர் கடந்த 22.5.2020ல் சமயநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.