பெரியகுளம், ஜூலை 28: பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ்- ராணி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 4வது மகள் மற்றும் 3வது மகள் செரின்னும் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் பி.காம். பட்டதாரியானசெரின் (25) உடல்நிலை சரி இல்லாததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் போலீசாரிடம் இறந்த அப்பெண்ணின் உறவினர்கள், உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.