காரியாபட்டி, ஜூலை 27: காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பில், நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல், பொது இடங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இப்பணியை பேரூராட்சி சேர்மன் செந்தில் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், எனது குப்பை - எனது பொறுப்பு என்பதை கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.