அதிகாரிகள் ஆய்வு வெள்ளகோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

வெள்ளகோவில், ஜூலை 27: வெள்ளகோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் என ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் இருந்த புகார் பெட்டியை சோதனை செய்தார். திருப்பூரில் பள்ளி கல்வித்துறை சார்பில், உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கரூர் சென்ற வழியில் வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் மதியம் 12:45 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளி வகுப்பறை, சத்துணவுக்கூடம், தலைமையரியர் அறை, அலுவலகம், பள்ளியில் உள்ள புகார் பெட்டியை திறந்து பார்த்தார். இதில் புகார் ஏதும் இல்லை. ஆய்வுக்குப் பின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியிர்களிடம் பள்ளியின் செயல்பாடு குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தலைமையாசிரியர் குணசேகரன் உடனிருந்தார், பள்ளி மாணவியர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆய்வைக் முடித்துக்கொண்டு அமைச்சர் கரூர் கிளம்பி சென்றார்.

Related Stories: