கஞ்சா வியாபாரிகளின் 17 வங்கி கணக்கு முடக்கம்

சிவகங்கை,: மாவட்ட எஸ்பி செந்திக்குமார் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 21 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 42 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை செய்த பணத்தை பரிவர்த்தனை செய்ய பயன்படுத்திய அவர்களுடைய வங்கி கணக்குகள், அவர்களின் கணவர் மற்றும் மனைவி ஆகியோரின் வங்கி கணக்குகள் என 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனை மூலம் வாங்கிய சொத்துக்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா மற்றும், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குற்றச்செயல்களை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: