மாணவர்களுக்கு ரக்பி கால்பந்து பயிற்சி அளிக்க முடிவு

உடுமலை, மே 25: திருப்பூர் மாவட்ட ரக்பி கால்பந்து கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. மாநில தலைவர் ராஜ்சத்யன், செயலாளர் செந்தில் தியாகராஜன் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் விஜயபாண்டி, பொருளாளர் முகமது இசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து, ரக்பி கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்துவது, மாவட்டத்தில் இருந்து தமிழகத்துக்காகவும், இந்தியாவுக்காகவும் வீரர்களை அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: