திருப்பூர், மே 21: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை 1,121 பேர் எழுதவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 91 தேர்வு மையங்களில் 218 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரத்து 717 மாணவ-மாணவிகள், தனித் தேர்வர்களாக 167 மாணவ- மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 884 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகள் முடிந்து பாடம் வாரியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த இயற்பியல் தேர்வுக்கு 11,776 பேர் விண்ணப்பித்திருந்தனர்.