விருதுநகர், மே 21: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேரியம் உப்பு கலந்து பட்டாசுகள், சரவெடிகளை தயாரித்து சேமித்து, விற்பனை செய்வதை தடுக்க தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.