சேலம், மே 11:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களுக்கெல்லாம் காவலராக திகழுந்து வருவதாக, சட்டமன்றத்தில் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் புகழாரம் சூட்டினார். தமிழக சட்டமன்றத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜேந்திரன் பேசியதாவது: தமிழக முதல்வர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, தமிழகத்தை அமைதி பூங்காவாக திகழச்செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் காவல்துறை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கான மாநாட்டில் பேசிய முதல்வர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு சட்டம்-ஒழுங்கு மிக முக்கியமானது என கூறியுள்ளார். மேலும், குற்றங்களே நடக்காத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.