தாலி செயின் பறிப்பு

விருதுநகர் அருகே வி.டி.மில் எதிர்புறம் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சூலக்கரை மேட்டை சேர்ந்த மனோகரன் மனைவி கோமதி (39) மெஸ் நடத்தி வருகிறார். நேற்று காலை பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள், கோமதியிடம் 3 பேர் குடிக்கும் அளவில் பார்சல் டீ கேட்டுள்ளனர். பைக்கை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்தவர் அடிக்கடி சென்று ஹெல்மெட் போட்ட நபரிடம் பேசி வந்துள்ளார். டீயை போட்டு கொடுத்த போது பின்னால் அமர்ந்து வந்த நபர், கோமதி கழுத்தில் இருந்த தாலி செயின் உளபட 2 செயின்களை பறித்து பைக்கில் ஏறி தப்பி சென்றுள்ளார். 3 பவுன் எடையுள்ள 2 செயின்கள் பறிபோனது குறித்து கோமதி அளித்த புகாரில் சூலக்கரை போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: