கிருஷ்ணகிரி, மே 3:கிருஷ்ணகிரி அருகே உள்ள காத்தான்பள்ளம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் 25ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் ஆலயத்தில் தர்மபுரி மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் மற்றும் பங்கு தந்தையர்கள் அந்தோணி, மதுரைமுத்து, தேவசகாயம், சுந்தரம், ஆரோக்கியசாமி ஆகியோரின் கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடந்து வந்தது. இதில் முக்கிய நிகழ்வான 25ம் ஆண்டு வெள்ளி விழா தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் வான வேடிக்கையுடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட சூசையப்பரின் தேர்பவனியை கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் துவக்கி வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார்.