ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 பேருக்கு விசிக அரிசி விநியோகம்

ஈரோடு,மே3: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மத நல்லிணக்க ரமலான் விழா கந்தசாமி வீதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது. இதில் 500 குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி தலைமை வகித்தார்.ஆட்டோ சையது முஸ்தபா, முபாரக், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தெற்கு மாவட்டச் செயலாளர் அம்பேத்கர்,தெற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில் மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் கீதா சையது இப்ராஹிம் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.  முடிவில் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பூபதி நன்றி கூறினார்.

Related Stories: