காங்கயம், ஏப். 21: காங்கயம் மற்றும் நத்தக்காடையூர் பகுதியில் உள்ள உரம் மற்றும் பூச்சிமருந்து கடைகளில் விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு உரம் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் ரவி, சமுக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் புனிதவதி, வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா, தோட்டக்கலை அலுவலர் சுபாஷினி ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகாரர்களிடம், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சிமருந்து பரிந்துரைக்கும்போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பரிந்துறைக்கப்பட்ட மருந்துகள், அளவுகளை பின்பற்ற வேண்டும்.