பழநி, ஏப். 20: பழநி அருகே பெரியம்மாபட்டி பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்தனர். அதில், ‘பழநி அருகே பெரியம்மாபட்டி கிராமத்தில் நரேந்திரன் என்கிற ஜமீன்தாரிடமிருந்து அரசு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1970ம் ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. அன்று முதல் எங்கள் ஊராட்சியை சேர்ந்தவர்களும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் அந்நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே விவசாயிகளுக்கு அரசு நிலப்பட்டா வழங்கி உள்ளது. மீதமுள்ள இடங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.