வளர்மதி கூட்டுறவு சங்கத்தலைவர் சஸ்பெண்ட்

திருப்பூர், ஏப் 20: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (வளர்மதி கூட்டுறவு சங்கம்) தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் சங்க செயல்பாடுகளில் உள்ள சீர்கேடுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சங்க தலைவர் கருணாகரன் இந்த ஆய்வுக்கு தேவையான ஆவணங்களை தர மறுக்கிறார். இதனால் அவர் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்தால் ஆய்வுக்கு இடையூறு ஏற்படும். இதனால் தலைவர் கருணாகரன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: