திருத்துறைப்பூண்டி நகரில் பிரசித்திபெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 31: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 28ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.நேற்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடந்ததை தொடர்ந்து பின்னர் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. இதில் உபயதாரர் மன்னார்குடி செங்கமலத்தாயார் அறக்கட்டளை தாளாளர் திவாகரனின் மகன் ஜெயானந்த், கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.முக்கிய திருவிழாவான தியாகராஜர் தேரோட்டம் வரும் 13ம் தேதி தாலுகா லாரி உரிமையாளர் நல சங்கம் சார்பிலும் 20ம் தேதி தெப்ப உற்சவம் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

Related Stories: