அன்னவாசல் அருகே குட்கா விற்றவர் கைது

விராலிமலை, மார்ச் 31: அன்னவாசல் அருகே மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அன்னவாசல் அருகே உள்ள லெக்ணாப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(47). மளிகை வியாபாரியான இவர் தனது கடையில் வைத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கடையை சோதனையிட்டனர். அப்போது குட்கா பொருட்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கணேசனை கைது செய்த போலிசார் அவரிடம் விற்பனைக்கு இருந்த 840 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: