திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வேர்க்கடலை விதைப்பண்ணையில் தரமான விதைகள் உற்பத்தி குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. வேர்க்கடலை விதைப் பண்ணையில் அறுவடைக்கு பின்னர் தரமான விதைகளை பெறுவது குறித்து திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் என்.ஜீவராணி, திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடியில் வழிகாட்டுதல்களை வழங்கினார். அப்போது அவர், வேர்க்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் அறுவடையின்போது விதைகளில் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். அறுவடையாகும் விதைகளை புதிய கோணிப்பபைகளில் சேர்க்க வேண்டும். பழைய ஈரமான கோணிப்பைகளை பயன்படுத்தக் கூடாது.