ஊட்டி, மார்ச் 25: ஊட்டி காட்டேஜ் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. செயலாளர் அப்துல் காதர் (எ) ஜமீல் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். தலைவர் அகஸ்டின் வரவேற்றார். கூட்டத்தில், ஊட்டி நகரம் துவங்கி 200 ஆண்கள் ஆன நிலையில், இதனை சிறப்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஊட்டி நகராட்சிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஊட்டி நகராட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 36 வார்டு கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், நிர்வாக குழு உறுப்பினர்கள் சாலமன்பாக்கியராஜ், ரியாஷ், சுரேஷ், ஜே.சாலமன், ராஜேஷ், பாஸ்கர், சுதாகர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். வினோத் ஐசக் நன்றி கூறினார்.