வத்திராயிருப்பு, மார்ச் 22: வத்திரயிருப்பில் இருந்து கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள பள்ளிகளில் கான்சாபுரம், கூமாபட்டி, பிளவக்கல் அணை, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, மாத்தூர், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் அரசு பஸ்களில் வந்து படித்து தங்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள். வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது.